இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
Published on

கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 22-ந்தேதி காலை தீமிதி திடலில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. 23-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com