திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2025-10-14 09:16 IST

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வி.கே.புரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த டானா பகுதியைச் சேர்ந்த அன்வர்அலி (வயது 45), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த அசன்மைதீன்(56) ஆகிய 2 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 50 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் 2 பேரையும் வி.கே.புரம் காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அன்வர்அலி, அசன்மைதீன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர்களிடமிருந்த 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்