13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பெயிண்டர் கைது
சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது, பெயிண்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.;
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 47). பெயிண்டரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன. கருத்துவேறுபாடு காரணாமாக அவரது மனைவி, விஜயகுமாரை விட்டு பிரிந்து, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.
இந்தநிலையில் விஜயகுமார், 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி, வீட்டில் தனியாக இருக்கும்போது, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.