சிறுமியிடம் சில்மிஷம் செய்த 2 சிறுவர்களுக்கு சிறை
2 சிறுவர்களுக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
திருப்பூர்,
தாராபுரத்தை சேர்ந்த 15 வயதுடைய 2 சிறுவர்கள் திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். கடந்த ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். இதுகுறித்து கே.வி.ஆர்.நகர் மகளிர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இளம்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. 2 சிறுவர்களுக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும், செங்கல்பட்டில் உள்ள அரசினர் சிறப்பு இல்லத்தில் தங்கி அங்கு அவர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப தொழிற்கல்வி அளிக்கவும் முதன்மை நடுவர் செந்தில்ராஜா, உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர்.