கொலை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 136 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;
தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் ராஜா (வயது 19) மற்றும் பசும்பொன்நகரை சேர்ந்த கண்ணன் மகன் பரமசிவம்(எ) சிவா(19) ஆகிய 2 வாலிபர்கள், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 6.11.2025 அன்று நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.
மேற்சொன்ன 2 வாலிபர்களை, மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (9.12.2025) சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 136 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.