ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் - தமிழக அரசு
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.;
சென்னை,
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விபரம்;
* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநராக ஆ.அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டார்.
* பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டார்.
* சென்னை மாநகராட்சி இணை ஆணையராக[கல்வி] க.கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார்.