தமிழக மீனவர்கள் 47 பேர் கைது : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
தலைமன்னார் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது;
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த 47 மீனவர்களையும், 5விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர். ஒரே நாள் இரவில் 47 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையின் அத்துமீறிய நடவடிக்கையானது, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.