திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

வள்ளியூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட துலுக்கர்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;

Update:2025-12-07 08:35 IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட துலுக்கர்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தங்கராஜை, வள்ளியூர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்