தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு

தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.;

Update:2025-12-25 11:04 IST

சென்னை,

மராட்டிய மாநிலம் மும்பை தாதரில் இருந்து திருநெல்வேலி வரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 15 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசல் காரணமாக ஜனவரி 24-ந்தேதி முதல் இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.

அதன்படி, 2 அடுக்கு ஏ.சி. பெட்டி 1, 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 2, 3 அடுக்கு எகானமி பெட்டி 1, முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் 4 என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்