750 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
750 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்
Published on

சென்னை,

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் சமீபத்தில் 621 காவல் சார்பு ஆய்வாளர்களும், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நாளை (3-ந் தேதி) காலை 10 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற இருக்கிறது. விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சீருடை பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com