கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
கூடங்குளம் பகுதியில் ஒருவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.;
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் குற்றமுறு மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், வைராவிகிணறு, நடுத்தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் ஆனந்த் (வயது 41) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் அடிதடி போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து அவர், மேற்சொன்ன நபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், ஆனந்த் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டார்.