சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் பகுதி நேரமாக ரத்து
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து நாளை மறுநாள் காலை 11.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக சிங்கபெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.