கோவை- மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் முடக்கம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கோவை, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.;

Update:2025-11-19 17:14 IST

சென்னை,

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவை, மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் - மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும் - 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10.00 மணிக்கு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்