தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 - பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு
அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.;
சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தேமுதிக கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணிக்கும், தலைவரை உயிர் மூச்சாய் கொண்டுள்ள அனைத்து தொடர்களுக்கும், என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகின்ற ஜனவரி 9 - 2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரின் பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்ற நமது மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்
இவ்வாறு அவர் கூறினார்.