மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

எஸ்.ஐ.ஆருக்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-20 12:52 IST

செனனை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை மாலை 6 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்" 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொருள்: வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls- SIR 2026) சரிபார்த்தல் குறித்து.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்