எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரெயிலுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.;

Update:2025-11-08 19:42 IST

கோவை,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்தேபாரத் புதிய ரெயிலை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்தநிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயில், கோவை நிலையம் வந்தது. அப்போது வந்த வந்தேபாரத் ரெயிலுக்கு பயணிகள், அதிகாரிகள், மாணவர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல, திருப்பூர் ரெயில் நிலையத்திலும் புதிய வந்தே பாரத் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்