இளம்பெண்ணுடன் உல்லாசம்... வீடியோவை கணவனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன் கைது
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது கணவனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.;
கோப்புப்படம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கடந்த 2020-ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்தவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அதிகமாக வெளியிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவரை பிரிந்த இளம்பெண் தனது பெற்றோர் வீடான உத்தமபாளையத்தில் தங்கி இருந்தார். இதனிடையே தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணுடன் பள்ளியில் படித்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராம்நகர் பூத்தாம்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி (32 வயது) என்பவர் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தேனிக்கு ஆன்லைன் பொருட்களை விற்பனை செய்ய வந்தபோது இளம்பெண்ணுடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததை அறிந்த மருதுபாண்டி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.
அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது மருதுபாண்டி சில வீடியோக்களை எடுத்து வைத்துள்ளார். அதனை தோழியின் கணவருக்கு அனுப்பினார்.
சேர்ந்து வாழ எண்ணிய நிலையில் இந்த வீடியோக்களை பார்த்த இளம்பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்தார். எனவே மருதுபாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மருதுபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.