தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிக்கு அடிக்கல்

தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.;

Update:2026-01-22 10:51 IST

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி தூத்துக்குடி முள்ளக்காட்டில் ரூ.2,292 கோடி மதிப்பில், 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்

மேலும் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் மந்தைவெளி பஸ் பணிமனை மற்றும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை சார்பில் ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி சாலைப் பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 



Tags:    

மேலும் செய்திகள்