வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு - விரைவில் விசாரணை

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-08-28 07:39 IST

சென்னை,

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வக்கீல் வெங்கட சிவக்குமார் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற 17-வது மக்களவை தேர்தலில், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் என மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும். எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும். அந்த அடிப்படையில் அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை, பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும்.

வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்