மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

கோட்டை அமீர் விருது தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
Published on

சென்னை:

2001-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. இவ்விருதானது 3/3" விட்டம் அளவுள்ள வெள்ளியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட ரூ.9,000/- மதிப்புடைய பதக்கம், ரூ.25,000/-க்கான பரிவுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் கொண்டதாகும்.

இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.25,000/-த்திலிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com