சட்டம் ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசை கண்டித்து 14ம் தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி

மக்கள் விரோதச் செயல்கள் நடைபெற்று வருவது போன்ற தொடர்கதையாகிவிட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்;

Update:2025-11-11 20:09 IST

சென்னை ,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களை பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

 திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவது மக்கள் விரோதச் செயல்கள் நடைபெற்று வருவது போன்ற தொடர்கதையாகிவிட்டது.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர். இந்த   திமுக ஆட்சி தமிழ் நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அதேபோல்,  திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில், மக்களின் பல்வேறு அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. மாறாக, பல்வேறு வரி உயர்வுகளை மக்கள் தலையில் சுமத்தி உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

சமீபத்தில், கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை. அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் காவலர் ஒருவர் பாலியல் சீண்டல் என, தமிழ் நாட்டின் வரலாற்றில் திமுக-வின் ஆட்சிக் காலம் ஒரு கரும்புள்ளி என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ் நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் திண்டிவனத்தில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் என தொடர்ந்து நடைபெற்று வரும் மகளிர் விரோத, மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டக் கழகம் மற்றும்

மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 14.11.2025 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் காந்தி சிலை அருகில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அலட்சியப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .

சென்னை ,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களை பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; போதைப் பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தல்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவது மக்கள் விரோதச் செயல்கள் நடைபெற்று வருவது போன்ற தொடர்கதையாகிவிட்டது.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர். இந்த விடியா திமுக ஆட்சி தமிழ் நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அதேபோல், விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியில், மக்களின் பல்வேறு அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. மாறாக, பல்வேறு வரி உயர்வுகளை மக்கள் தலையில் சுமத்தி உள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

சமீபத்தில், கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி ஒருவருக்கு எதிராக நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை. அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் காவலர் ஒருவர் பாலியல் சீண்டல் என, தமிழ் நாட்டின் வரலாற்றில் திமுக-வின் ஆட்சிக் காலம் ஒரு கரும்புள்ளி என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் மெய்ப்பித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ் நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்

கலாச்சாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் திண்டிவனத்தில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் என தொடர்ந்து நடைபெற்று வரும் மகளிர் விரோத, மக்கள் விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டக் கழகம் மற்றும்

மாவட்ட மகளிர் அணியின் சார்பில், 14.11.2025 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில்,

திண்டிவனம் காந்தி சிலை அருகில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக்

கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அலட்சியப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்