குடும்ப பிரச்சினையில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் ஒரு லாரி டிரைவரின் மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.;
தூத்துக்குடி முள்ளக்காடு சந்தோஷம் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் காளிமுத்து (வயது 48), லாரி டிரைவர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். காளிமுத்து வேலைக்கு சென்று விட்டு தினசரி மதுபோதையில் வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சித்ரா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இதனால் மன வேதனை அடைந்த காளிமுத்து நேற்று இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.