சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றம்

சில முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.;

Update:2025-12-10 17:52 IST

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, டிசம்பர் 15, 2025 முதல் பிப்ரவரி 03, 2026 வரை சில முக்கிய ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

  • தஞ்சாவூர் - எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 16866/16865) டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 02 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரெயில் டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 3 வரை இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
  • கொல்லம் - எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 20636/20635) டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 02 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரெயில் டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 3 வரை இரவு 8.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
  • ராமேசுவரம் - எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16752/16751) டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 02 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில் டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 3 வரை இரவு 7.42 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
  • ஐதராபாத்- தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12760/12759 ) ஜனவரி 01 முதல் பிப்ரவரி 03 வரை சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் ரெயில் டிசம்பர் 31 முதல் பிப்ரவரி 2 வரை மாலை 6.20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
  • எழும்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 22158) டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 03 வரை சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் ரெயில் டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 3 வரை காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்