பராமரிப்பு பணி: சென்னையில் 3-ந்தேதி மின்தடை
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னையில் 03.01.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
எம்.எம்.டி.ஏ. காலனி: ஏ பிளாக் முதல் ஆர் பிளாக் வரை, கமலா நேரு நகர் 1 மற்றும் 2-வது தெரு, அசோக் நகர், சுப்பராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர்,100 அடி சாலை.
அரும்பாக்கம்: மேத்தா நகர், என்.எம். சாலை, எம்.எச். காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கை வாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்டரேட் காலனி, அய்யாவூ காலனி, காயத்திரி தேவி, ரசாக் கார்டன், ஜே.டி. துரைராஜ் நகர், ஆசாத் நகர், வி.ஜி.ஏ. நகர், எஸ்.பி.ஐ. ஆபிசர்ஸ் காலனி.
சூளைமேடு: சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு வரை, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2-வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2-வது தெரு, நெல்சன் மணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு பிரதான சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகண்டன் தெரு, கான் தெரு.
கோடம்பாக்கம்: பஜனை கோவில் 3 மற்றும் 4-வது தெரு,
அழகிரி நகர்: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் பிரதான சாலை, காந்தி அண்ணன் கோவில் தெரு, பெரியார் பாதை, அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.