பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (18.12.2025, வியாழன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: காரம்பாக்கம் கந்தசாமிநகர், பொன்னிநகர், மோதிநகர், பத்மாவதிநகர், காவேரிநகர், தர்மராஜாநகர், விஸ்வநாதன் தெரு, பிராமனர் தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.