4½ ஆண்டுகள் மக்களை வாட்டி வதைத்த தீமைகள் யாவும் அகலட்டும் - எடப்பாடி பழனிசாமி போகி வாழ்த்து
நாளை வரும் தை, தமிழகத்தின் மீட்சிக்கு அடித்தளமிடட்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நான்கரை ஆண்டுகள் மக்களை வாட்டி வதைத்த தீமைகள் யாவும் அகன்றிட , மக்கள் ஏற்றும் போகியின் நெருப்பு அழித்தொழிக்கட்டும்!
நாளை வரும் தை, தமிழகத்தின் மீட்சிக்கு அடித்தளமிடட்டும் !
அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துகள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.