சென்னையில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - வைகோ அறிவிப்பு
எழும்பூரில் 23-ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
"ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் வருகிற 23-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.