தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-09 01:46 IST

கடந்த 2015ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலையன்கரிசல் பகுதியில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் பொன்நிமேஷ் (வயது 35) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்தவர்களான மாடசாமி மகன் பொன்சேகர்(70), பொன்சேகர் மகன் சுபாகர்(32), முருகேசன் மகன்களான ரமேஷ்(30), சுரேஷ்(28) மற்றும் முருகன் மகன் மாடசாமி(31) ஆகிய 5 பேரையும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம் நேற்று (8.11.2025) பொன்சேகர், சுபாகர், ரமேஷ், சுரேஷ் மற்றும் மாடசாமி ஆகிய 5 பேருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல்ராஜ், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் விஜயா ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்