5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கருமலைசாமி (65 வயது) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆண்டு சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கருமலைசாமி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பத்மா முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, கருமலைசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்டசிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.