சென்னையில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2026-01-07 17:56 IST

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னையில் 09.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

வளசரவாக்கம்: விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், சுரேஷ் நகர், கைக்கான் குப்பம், வி.ஓ.சி. தெரு, பாரதி காலனி, ஆற்காடு சாலை, கிழக்கு காமகோடி நகர், திருவள்ளுவர் தெரு, எஸ்.வி.எஸ். நகர், சௌத்ரி நகர், இந்திரா நகர், மசூதி தெரு, பெரியார் நகர், மீனாட்சியம்மன் நகர், லட்சுமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்: நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, மலையம்பக்கம், பிள்ளையார் கோவில் தெரு, ரஹ்மத் நகர், சக்தி நகர், எல்.கே.பி நகர், வசந்தபுரி, எஸ்.பி. அவென்யு, தேவதாஸ் நகர், சுமித்ரா நகர், ருக்மணி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்