திருநெல்வேலியில் போக்சோ வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஒரு நபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.;
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மறுகால்குறிச்சியை சேர்ந்த நல்லகண்ணு மகன் செல்லத்துரை(எ) செல்வா (வயது 37) என்பவர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
இவர் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதின்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், நேற்று (27.11.2025) மேற்சொன்ன நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.