ரூ.3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு:டோக்கன் விநியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் வரும் 8ம் தேதி தொடங்க உள்ளது.;

Update:2026-01-04 14:31 IST

சென்னை,

பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.248 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் பொங்கல் பண்டிகை இது என்பதால், ரொக்க பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட இருக்கிறது. மேலும் ரூ3 ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.6936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கப்பட இருக்கிறது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

வரும் 8ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். அன்றைய தினம் முதல், வரும் 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்தநிலையில், ரூ.3,000ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடங்கி உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்