திமுகவுக்கு ஷாக் கொடுப்பார் ஷா - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகம் ஆணவம் பிடித்த தலைமைக்கு தலைவணங்கியது கிடையாது. திமுக ஆட்சிக்கு மக்கள் வேட்டு வைப்பர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;

Update:2025-12-10 18:39 IST

சென்னை

எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்தநிலையில், திமுகவுக்கு ஷாக் கொடுப்பார் ஷா என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

தமிழக அரசியலில் "ஷா " விற்கும் திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.???.. அப்போதைய கவர்னர் கே கே ஷா வால். திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட்டது. அந்த ஷாவை போல அமித் ஷாவும் திமுகவை வீட்டுக்கு அனுப்புவார். 1976 ஐ போல ஒரு ஷாக்கை கொடுக்க ஒரு ஷா 2026 இல் வருகிறார்.. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கருப்பு சிவப்பு படையை எதிர்கொள்ள காவிப்படை தயாராகவே இருக்கிறது.தமிழகம் என்றுமே ஆணவம் பிடித்த தலைமைக்கு தலைவணங்கியது கிடையாது..திருப்பரங்குன்றத்தில். இந்து தர்மத்தை ஆணவத்தோடு அதிகார மமதையில் அடக்க நினைக்கிறீர்கள். தீபாவளிக்கு நீங்கள் வாழ்த்துகள் கூட சொல்வதில்லை ஆனால் உலகம் முழுவதும் இந்து பண்டிகையான தீபாவளிக்கான கொண்டாட்டத்தை #யுனெஸ்கோ அங்கீகரித்து இருக்கிறது. ஆக இந்து தர்மத்தை பொருத்தமட்டில் நீங்கள் தடுக்க நினைப்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது. ஆக எல்லாம் தங்களுக்குத்தான் out of control ஆகி வருகிறது. உங்கள் வாக்குச்சாவடிகள் வெற்று வாக்கு சாவடிகளாக மாறி.. திமுக ஆட்சிக்கு வேட்டு வைப்பதை பார்க்கத்தான் போகிறீர்கள் என அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்