சென்னை போரூர் அருகே அதிர்ச்சி: டியூஷன் சென்ற சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய்
தெருநாய் கடித்ததில், காயம் அடைந்த சிறுவன், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
சென்னை,
சென்னை போரூர் அருகே டியூஷனுக்கு சென்ற 8-வயது சிறுவனின் முகம், கை கால்களில் கடித்துக்குதறியுள்ளது. அக்காவுடன் டியூஷன் சென்றபோது சிறுவனை தெருநாய் கடித்துள்ளது. தெருநாய் கடித்ததில், காயம் அடைந்த சிறுவன், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதே போல, பூவிருந்தவல்லி அருகே வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த சரளாதேவி என்ற பெண்ணையும் நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், அதைக்கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.