தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாம்: கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது.;
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம், இன்று மற்றும் நாளை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. முகாம் நடைபெறும் மையங்களான பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விகாஸா பள்ளிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான இளம்பகவத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் ப்ரியங்கா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.