ஆசிரியர் தகுதித் தேர்வு - தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு நடைபெற்றதால், அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.;
சென்னை,
பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் 10-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிந்தது. இந்த நிலையில், ஆசிரியர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-1 இன்று 367 மையங்களில் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் தகுதித் தேர்வை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு நடைபெற்றதால், அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து நாளை நடைபெறும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள்-2 தகுதித்தேர்வை 1,241 மையங்களில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் எழுத உள்ளனர்.