நாளை மறுநாள் நடைபெற இருந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஒத்தி வைப்பு - தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னையில் நாளை மறுநாள் நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு செயலாளர் ராம் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தலைவர்கள் அனைவரும் தேர்தல் ஆயத்த வேலைகளில் டெல்லியில் இருப்பதால் நாளை மறுதினம் (19.01.2026) திங்கட்கிழமை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெறவிருந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மறுதேதி குறிப்பிடாமல் மாற்றியமைக்கப்படுகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.