பத்திர பதிவுத்துறை இணையதளம் நாளை செயல்படாது - அதிகாரி தகவல்
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும்.;
சென்னை,
பத்திர பதிவுத்துறைத்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பத்திர பதிவுத்துறையின் இணையதளம் https://tnreginet. gov.in பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்திற்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணியில் இருந்து நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிவரை பதிவுத்துறையின் இணையதளம் செயல்படாது, இருப்பினும் மேற்கூறிய 2 தினங்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும்.
நாளை (22-ந்தேதி) அன்று பத்திரம் பதிவு செய்ய உள்ள பொதுமக்கள் மேற்படி இணையதளம் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படாது என்பதைக் கருத்தில் கொண்டு இன்று இரவு 7 மணிக்குள் டோக்கன் எடுப்பது, ஆன்லைன் கட்டணம் செலுத்துவது, வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல்களை பெறுவது போன்ற பதிவுத்துறையின் இணையதள சேவைகளை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.