திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் ரகுபதி விளக்கம்
மதவாதிகள் எவ்வழியேனும் காலூன்ற எண்ணுகிறார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.;
சென்னை,
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
- “திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சினையை எழுப்புகிறார்கள்.
- மதவாதிகள் காலூன்ற நினைக்கிறார்கள்.
- நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள்தான் அவர்கள்தான்.2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது ஒரு தீர்ப்பைப் பெற்றுள்ளனர்.2014 தீர்ப்பு படியே நாங்கள் நடந்து கொள்கிறோம்.”
- எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலையே இல்லை.
- திமுக அரசின் மீது குற்றச்சாட்டை சொல்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் வேலை.
- தமிழ்நாடு மக்கள் ஏமாளிகள் அல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.