தூத்துக்குடி: காவல்துறை அதிகாரிகளுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி

தூத்துக்குடி, வல்லநாட்டில் வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.;

Update:2025-07-19 23:48 IST

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி இன்று தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி, வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் முதல் அதற்கு மேல் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கான வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி இன்று (19.07.2025) துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் இன்று துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், சாத்தான்குளம் உட்கோட்ட டி.எஸ்.பி. சுபகுமார், கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் உட்பட காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்