தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், பந்தல் போடும் தொழில் செய்து வந்தார்.;

Update:2025-11-09 01:59 IST

தூத்துக்குடி மீளவிட்டான் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (வயது 48), பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவர் தினசரி வீட்டுக்கு மதுபோதையில் வருவதால் அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனவேதனையடைந்த ஆனந்தராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்