தூத்துக்குடி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கஞ்சா விற்பனை செய்தார்.;
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட, தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் உத்தண்டுமுருகன் (வயது 25) என்பவரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.