திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.;
திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட பொட்டல் பகுதியை சேர்ந்த முத்துகருப்பன் (வயது 40) மற்றும் பாலநேசன்(36) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். மேற்சொன்ன நபர்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஒன்றரை (1 1/2) மாதம் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் முத்துகருப்பன் மற்றும் பாலநேசன் ஆகிய 2 பேருக்கும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்சொன்ன 2 பேரையும் தாலுகா போலீசார் தேடிவந்த நிலையில் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.