திருநெல்வேலியில் எம்.சாண்ட் மணல் திருடிய வாலிபர் கைது: லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2025-12-16 21:31 IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்பலவானபுரத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (வயது 27) என்பவர் வந்த மினி டிப்பர் லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர், 2 யூனிட் எம்.சாண்ட் (M. SAND) மண்ணை எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக அள்ளிக் கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிவராமகிருஷ்ணனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 2 யூனிட் எம்.சாண்ட் மண் மற்றும் மினி டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்