தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது;

Update:2026-01-10 13:59 IST

சென்னை,

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்யக்கூடும்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். இதேபோல் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று  வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்