இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-18 16:43 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி

இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை

செங்கல்பட்டு,

சென்னை,

கடலூர்,

காஞ்சிபுரம்,

ராணிப்பேட்டை,

திருவள்ளூர்,

திருவண்ணாமலை,

விழுப்புரம்

மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்கள்

இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

கள்ளக்குறிச்சி,

கன்னியாகுமரி,

மயிலாடுதுறை,

Advertising
Advertising

நாகப்பட்டினம்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம்,

சேலம்,

தென்காசி,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

தூத்துக்குடி,

திருநெல்வேலி

மற்றும் காரைக்கால் பகுதி.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “நேற்று (17-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (18-11-2025) காலை 8.30 மணி அளவில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

இன்று 18-11-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்