பூட்டானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

இந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2026-01-02 06:48 IST

திம்பு,

பூட்டானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.14 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 89.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்