2வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றுமா இந்தியா ? நியூசிலாந்துடன் நாளை மோதல்
2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நாளை நடைபெற உள்ளது;
மும்பை,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நாளை நடைபெற உள்ளது. நாளை மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இந்த போட்டியில் வென்று தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் நியூசிலாந்து விளையாடும்.