ஆசிய கோப்பை: ஜிதேஷ் உள்ளே.. சாம்சன் வெளியே.. ரகானே தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை ரகானே தேர்வு செய்துள்ளார்.;
மும்பை,
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் சுப்மன் கில், சஞ்சு சாம்சன், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை ரகானே தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் சாம்சனுக்கு இடமளிக்காத அவர் ஜிதேஷ் சர்மாவை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார். அத்துடன் தொடக்க ஜோடியாக அபிஷேக் சர்மாவுடன் சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ளார்.
ரகானே தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி/ ஹர்ஷித் ராணா