சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் வங்காளதேசம்

சாம்பியன்ஸ் டிராபியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதி வருகின்றன.;

Update:2025-02-20 15:50 IST

துபாய்,

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீசி வருகிறது.

ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய முகமது சமி, சவுமியா சர்காரை காலி செய்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 2-வது ஓவரை வீசிய ஹர்சித் ராணா, கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவை அவுட்டாக்கினர். சிறிது நேரம் நிலைத்த டான்சித் ஹசன்(25) அக்சரின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுலிடம் பிடிபட்டார்.

மெஹதி ஹசன் மிராஸ், அனுபவ வீரர் முஷ்பிகூர் ரகீமும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணி திணறி வருகிறது. அந்த அணி, 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 65ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்